31 December 2006
இவைகளுக்காய்
நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..
ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..
முதலில்யாருக்கு
கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...
இருந்தும்..
உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..
சூட மலர்ந்தது நிலா
22 December 2006
Subscribe to:
Posts (Atom)